
Actress Parvati Nair : அபுதாபியில் பிறந்து, இப்போது இந்திய திரை உலகில் நல்ல பல திரைப்படங்களில் நடித்து, புகழ்பெற்று வரும் நடிகை தான் பார்வதி நாயர், அவருக்கு வயது 31.

கேரளாவை பூர்விகமாகக் கொண்ட பிரபல நடிகை பார்வதி நாயர், கடந்த 1992 ஆம் ஆண்டு அபுதாபியில் பிறந்தார். மாடல் அழகியாகத் தனது பயணத்தைத் தொடங்கினார்.

அதன் பிறகு கடந்த 2012ம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர், மலையாள மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். கன்னட மொழியில் இவர் நடித்த முதல் திரைப்படத்திற்காகவே இவருக்குச் சைமா வழங்கும் சிறந்த அறிமுக நடிகைக்கான விருது கிடைத்தது.
தமிழில் கடந்த 2015ம் ஆண்டு, பிரபல நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான “என்னை அறிந்தால்” திரைப்படத்தின் மூலம் இவர் கோலிவுட் உலகிலும் அறிமுகமானார். அந்தப் படத்தில் நடித்ததற்காக Film Fare விருதுக்கு இவர் நாமினேட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்போது தொடர்ச்சியாகத் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் நடிகை பார்வதி நாயர், தளபதி விஜயின் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமேற்று நடித்துள்ளார்.

