
பாஜக.வில் மத்திய அமைச்சர்கள் கூட அச்சத்தில் தான் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி மக்களவையில் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதிநிலை அறிக்கையைக் கடந்த 23ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீது எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், பாஜக தங்கள் கட்சியில் ஒருவரை மட்டுமே பிரதமராக அறிவிக்கிறது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக இருக்கும் ராஜ்நாத் சிங் கூடப் பிரதமராக யோசிக்க முடியாத நிலை தான் பாஜக.வில் உள்ளது. பாஜக.வில் மத்திய அமைச்சர்கள் கூட அச்சத்தில் தான் உள்ளனர்.

