தோல்வியை ஏற்றுக்கொண்ட PTR .. கவனம் ஈர்த்த பதிவு வைரல்..!

Advertisements
“முதல் தேர்தலிலேயே தவெக 35% வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கவில்லை” தமிழகத்தில் இருதுருவ அரசியல் முடிவுக்கு வந்து ஒரு புதிய சகாப்தம் தொடக்கம் என தேர்தல் முடிவுகள் குறித்து திமுவைச் சேர்ந்த ஒரு முக்கியத் தலைவர், PTR  – பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.. இது  அரசியல் வட்டாரத்தில் மிகவும் பேசுபொருளாக மாறியுள்ளது.. இது குறித்த பின்னணி தகவல்களை தற்பொழுது விரிவாக பார்க்கலாம்..!
தமிழக அரசியல் களம் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இரு முக்கிய துருவங்களை நோக்கியே சுழன்று கொண்டிருந்தது. ஒருபுறம் திமுக, மறுபுறம் அதிமுக என மாறி மாறி ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த திராவிடப் பேரியக்கங்களின் கோட்டையை, ஒரு புதிய கட்சி இவ்வளவு சீக்கிரம் அசைத்துப் பார்க்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூட கணித்திருக்கவில்லை..
ஆனால், “மக்களின் தீர்ப்பு எப்போதும் ஆச்சரியங்கள் நிறைந்தது” என்பதை நிரூபிக்கும் வகையில், 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த இந்திய அரசியலையே தமிழகத்தை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. தேர்தல் களம் கண்ட முதல் தேர்தலிலேயே, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சுமார் 35 சதவீத வாக்குகளைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
50 ஆண்டுகால அரசியல் அனுபவம் வாய்ந்த பாரம்பரியக் கட்சிகளின் வாக்கு வங்கியைத் தவிடுபொடியாக்கி, தமிழகத்தின் பெரும்பான்மையான தொகுதிகளில் தவெக முன்னிலை பெற்று சாதனை படைத்துள்ளது.

குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் தவெக நோக்கி நகர்ந்ததே இந்த இமாலய வெற்றிக்குக் காரணம் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் முடிவுகள் குறித்து, திமுகவின் மிக முக்கியமான மற்றும் அறிவுப்பூர்வமான முகங்களில் ஒருவரான பிடிஆர் (PTR) தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்ட கருத்து, இப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அவர் தனது பதிவில் குறிப்பிட்டதாவது: “முதன்முதலாகத் தேர்தலைச் சந்திக்கும் ஒரு புதிய கட்சி (தவெக), தனது முதல் தேர்தலிலேயே 35% வாக்குகளைப் பெறும் என்று நான் மட்டுமல்ல, அரசியல் களத்தில் இருக்கும் யாருமே எதிர்பார்க்கவில்லை.

இது ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம். இதன் மூலம் தமிழகத்தில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த இருதுருவ அரசியல் அதிகாரப் போட்டி ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தமிழக அரசியல் ஒரு புதிய சகாப்தத்தை நோக்கித் தடம் பதித்துள்ளது என்பதை இந்த முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன.” திமுவைச் சேர்ந்த ஒரு முக்கியத் தலைவர், தங்களது பின்னடைவையும் மாற்று சக்தியின் எழுச்சியையும் இவ்வளவு வெளிப்படையாகவும் முதிர்ச்சியுடனும் ஒப்புக்கொண்டிருப்பது தற்போதைய அரசியல் சூழலில் மிக உன்னதமான அரசியல் நாகரிகமாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் , இவர் கடந்த தி.மு.க அமைச்சரவையில் நிதித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகப் பணியாற்றிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, தனது எதிர்காலத் திட்டம் குறித்து முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் அடுத்த தேர்தல் வரை மக்கள் பிரதிநிதியாக இருக்கப்போவதில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதாகவும், பொதுவாழ்வில் இருந்து சில காலம் ஓய்வு எடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் , சென்னை, திருச்சி, மதுரை எனத் திமுகவின் கோட்டைகளாகக் கருதப்பட்ட பல நகர்ப்புறத் தொகுதிகளிலும், அதிமுகவின் ஆதிக்கத்தில் இருந்த மேற்கு மண்டலங்களிலும் தவெகவின் அலை பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.சாதி, மத எல்லைகளைக் கடந்து தவெகவின் கொள்கைகளும், அதன் தலைமையின் மீதான நம்பிக்கையும் அடிமட்டத் தொண்டர்கள் வரை ஊடுருவியுள்ளது.காலம் காலமாக “திமுக அல்லது அதிமுக” என்ற இரு சாய்ஸ்களுக்குள் மட்டுமே சுழன்றுகொண்டிருந்த தமிழக மக்களுக்கு, இப்போது ஒரு வலுவான மாற்றுப் பாதை கிடைத்துள்ளது.

பிடிஆர் (PTR) குறிப்பிட்டதைப் போல, இது வெறும் ஒரு கட்சியின் வெற்றி மட்டுமல்ல; தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம். இனிவரும் காலங்களில் தமிழக அரசியல் களம் எப்படிப்பட்ட மாற்றங்களைச் சந்திக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *