
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரி அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளின் கடற்படையினர் கூட்டு போர் பயிற்சியில் வடகொரியாவுக்கு எதிராக நடைபெற உள்ளது. முத்தரப்பு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு 15 நாட்களுக்கு சிறப்பு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரிய தீபகற்ப கடலில் நடைபெறவுள்ள இந்த ராணுவ பயிற்சிக்கு எதிராக வடகொரியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரியும் அந்த நாட்டின் மூத்த அரசியல்வாதியும் ஆன கிம் யோ ஜாங், அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளார்.
இதில், இந்த ராணுவ பயிற்சி பொறுப்பற்ற அதிகாரங்களில் கூட்டணியால் நடத்தப்படுகிறது என்றும் இது எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்தார்.


