
ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கிஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு
திங்கட்கிழமை முதல் 2023ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றைத் தொடர்ந்து இலக்கியத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. நார்வே நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரான ஜான் ஃபோஸ்-க்கு இந்தாண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
குரலற்றவர்களி
பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடியதற்காக ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கிஸ் முகமதிக்கு 2023 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுள்ளது. அக்டோபர் 9ஆம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படஉள்ளது.



