
பிரபல மோடிவேஷனல் பேச்சாளர் விவேக் பிந்த்ரா பிந்த்ரா திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே மனைவி மீது புகார் கொடுத்த சம்பவம் வைரலாகி வருகிறது.
விவேக் பிந்த்ராவை இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் மில்லியன் கணக்கானோர் பின்தொடர்கிறார்கள்.
பிரபல மோட்டிவேஷனல் பேச்சாளரும், சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு செலுத்துபவருமான விவேக் பிந்த்ரா, தனது மனைவிக்கு எதிராக குடும்ப வன்முறை புகார் தெரிவித்துள்ளார். அவர் மீது நொய்டாவின் செக்டார் 126-ல் அவரது மைத்துனர் வழக்கு பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பிந்த்ராவின் மனைவி யானிகாவின் சகோதரர் வைபவ் குவாத்ரா அளித்த புகாரில், இந்த சம்பவம் நொய்டாவின் செக்டார் 94 இல் உள்ள சூப்பர்நோவா வெஸ்ட் ரெசிடென்சியில் நடந்ததாகக் கூறினார்.
கடந்த 7ம் தேதி அதிகாலை பிந்த்ராவுக்கும், அவரது தாய் பிரபாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. குடும்பத் தகராறில் தொடங்கிய யானிகா மத்தியஸ்தம் செய்ய முன்வந்தபோது, பிந்த்ராவால் உடல் ரீதியாகத் தாக்கப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலால் யானிகாவின் உடலில் ஆழமான காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது, இது ஒரு வீடியோவில் பதிவாகியுள்ளது, இது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்ட விவரங்களின்படி, பிந்த்ரா மற்றும் யானிகா டிசம்பர் 6 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே பிந்த்ரா யானிகாவை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று தகாத வார்த்தைகளால் திட்டி, அவரது தலைமுடியை இழுத்து தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்கப்பட்டதால் யானிகாவுக்கு சரியாக காது கேட்கவில்லை என்று புகாரில் கூறப்பட்டுள்ளது. பிந்த்ரா தனது போனையும் உடைத்ததாக கூறப்படுகிறது.
படா பிசினஸ் பிரைவேட் லிமிடெட் (பிபிபிஎல்) தலைமை நிர்வாக அதிகாரியும், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கானவர்களைப் பின்தொடரும் பிந்த்ராவும் ஒரு மோசடியின் மையத்தில் இருப்பதாக மற்றொரு உயர்மட்ட இந்திய மோட்டிவேஷனல் பேச்சாளரும் யூடியூபருமான சந்தீப் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
மகேஸ்வரி தனது யூடியூப் சேனலில் “பிக் ஸ்கேம் அம்பலஸ்” என்ற தலைப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டார், அதில் பிந்த்ராவின் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டதாகக் கூறிய மாணவர்களின் சான்றுகளை வழங்கினார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பிந்த்ரா மறுத்துள்ளார்.


