
பெரியார் பிறந்த நாளையொட்டித் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தந்தை பெரியார் – இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு என்றும், தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தந்தை பெரியார் என்றும் – எங்கும் நிலைத்திருப்பார் என்று குறிப்பிட்டுள்ளதுடன் பெரியாரின் தொண்டுகள் குறித்த காணொலியையும் வெளியிட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்தியில், கேள்விகள் கேட்டுப் பகுத்தறிவை விதைத்தவர், உணர்வுகளைத் தட்டி உழுப்பி உரிமைக்காகப் போராடியவர் பெரியார் என்று குறிப்பிட்டுள்ளார்.
யாருக்கும் யாரும் சிறியார் அல்ல என்றார்! அதனாலே அவர் நம் பெரியார் என்றானார்! என்று குறிப்பிட்டுள்ளார்.




