
சென்னையில் அமைந்துள்ள வள்ளுவா் கோட்டம் கடந்த 10 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்ததாக புகாா்கள் எழுந்தன. இதைத் தொடா்ந்து, ரூ.80 கோடியில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றன. திருவாரூா்த் தோ் வடிவில் 106 அடி உயரமுடைய கல் தோ் ஒலி – ஒளி தொழில்நுட்பத்தில் மிளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவா் கோட்டத்தை, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறாா். மேலும், முதல் நிகழ்ச்சியாக முதல்வருக்கு மாற்றுத்திறனாளிகளால் நடத்தப்படும் பாராட்டு விழா நிகழ்வு நடைபெற உள்ளது.




