மகா கும்பமேளா நாளையுடன் நிறைவு!

Advertisements

பிரயாக்ராஜ்: 

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நாளை (பிப்.26) நிறைவடைகிறது.

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ம் தேதி தொடங்கியது. திரிவேணி சங்கமத்தில் தினமும் 1 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடுவதற்காக வருகிறார்கள். இங்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை 6 கோடியைக் கடந்ததாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஒரு மற்றும் மாதமாக நடைபெற்று வரும் கும்பமேளா, மகா சிவராத்திரி தினமான நாளை (பிப்.26) முடிவடைகிறது. இதற்கான ஏற்பாடுகள் உலகம் முழுவதும் இருந்து பல பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக, அயோத்தி தாம் ரயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரயிலில் வரும் பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட உள்ளது.

140 பேர்மீது வழக்குப் பதிவு:

இதற்கிடையில், கும்பமேளா தொடர்பான தவறான தகவல்களை வெளியிட்ட 140 சமூக ஊடகவியலாளர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மகா கும்பமேளா சிறப்பு டிஐஜி வைபவ் கிருஷ்ணா தெரிவித்ததாவது: திரிவேணி சங்கமத்தில் 24-ம் தேதி (நேற்று) அதிகமான மக்கள் புனித நீராடியுள்ளனர். நிறைவு நாளான 26-ம் தேதி கும்பமேளாவில் அதிகளவிலான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கும்பமேளா குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்பிப் பொதுமக்களுக்குக் குழப்பம் ஏற்படுத்திய 140 சமூக ஊடகவியலாளர்கள்மீது 13 முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *