Polygamy: ஐந்து ஆண்டுகளுக்கு பின்பு சிக்கிய காதல் மன்னன் கைது!

Advertisements

ரயில் பயணத்தில் விஜிலென்ஸ் அதிகாரி என அறிமுகமாகி கல்லூரி மாணவியை மூன்றாவதாக திருமணம் செய்து ஐந்து ஆண்டுகளுக்கு பின்பு சிக்கிய காதல் மன்னன் கைது.

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள பட்டா குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த காயத்திரி (27). கடந்த 2017 ஆம் ஆண்டு மதுரை தனியார் கல்லூரியில் படிக்கும் போது ரயிலில் பயணம் செய்வது வழக்கம். அதே ரயிலில் பயணம் செய்த ராஜபாளையம் அருகே உள்ள சுந்தர நாச்சியாபுரம் பகுதியைச் சேர்ந்த ராயப்பன் மகன் அருள்ராயன் (40) என்பவர் தன்னை விஜி லென்ஸ் ஆஃபீஸர் என காயத்ரியுடன் அறிமுகமாகியுள்ளார். நட்பாக மாறி பின்பு காதலாகி வீட்டிற்கு தெரியாமல் மதுரையிலேயே திருமணமும் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

பின்பு தனியாக வீடு எடுத்து மதுரையிலும் திருமங்கலத்திலும் இரண்டு வருடங்களாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இதற்கிடையில் தன்னை அருள் ராயன் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு காயத்திரி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. தன்னை பிசியான அதிகாரி போல காட்டிக் கொண்டு

பல விதத்தில் காரணங்களை கூறி தட்டிக் கழித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. அதன் பின்பு காயத்ரியை அவரது சொந்த ஊரான பட்டா குறிச்சியில் விட்டு விட்டு சமாதானமாக கூறி மீண்டும் குடும்பம் நடத்தியுள்ளனர்.
இதற்கிடையில் மாதத்திற்கு நான்கு நாட்கள் காயத்ரி வீட்டிற்கு வந்து போவதை வழக்கமான ஒன்றாக வைத்திருந்துள்ளார். இந்த நிலையில் உண்மையிலே இவர் விஜிலன்ஸ் அதிகாரிதானா என காயத்ரியின் குடும்பத்தாருக்கு சந்தேகம் வரவே அருள்ராயன் சொந்த ஊரான சுந்தரநாச்சியாபுரம் பகுதியில் சென்று விசாரித்துள்ளனர்.

அப்போது அவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் நடைபெற்றதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது. அதை கேட்டு காயத்திரி குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவர் விஜிலென்ஸ் அதிகாரியும் இல்லை எனவும் தெரியவந்தது.

இது குறித்து அருள்ராயனிடம் பெண் வீட்டார் விபரம்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து காயத்ரி அப்பா மீது அருள்ராயன் எட்டு லட்ச ரூபாய் தன்னிடம் இருந்து பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக மாவட்ட ஆட்சி தலைவரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த புகாரின் அடிப்படையில் புளியங்குடி காவல் நிலையத்திற்கு காவல்துறையினர் விசாரணைக்கு இருதரப்பையும் அழைத்துள்ளனர். இரு தரப்பும் வந்த நிலையில அருள்ராயன் காயத்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காயத்ரியின் புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது அருள்ராயன் முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையில் அவர் காயத்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அப்போது அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கல்லூரி காலத்தில் ரயில் பயணத்தின் போது ஏற்பட்ட நட்பு, காதலாகி கசிந்ததால் நிம்மதியின்றி கசந்துள்ள சம்பவம் டிப்டாப் ஆசாமிகளால் பெண்கள் எப்படி எல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணமாக உள்ளது…

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *