
கோவை GN மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ்.. இவருக்கு 37 வயதாகிறது.. கிறிஸ்தவ மத போதகர். தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த இவர் தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஆராதனையும் நடத்தி வருகிறார்.. இவர்மீது 2 சிறுமிகள் கோவை காட்டூரில் மகளிர் போலீசில் புகார் தந்துள்ளனர்.. இதையடுத்து, ஜான் ஜெபராஜ் மீது போக்சோ பாய்ந்துள்ளது. தற்போது தலைமறைவாகி உள்ள நிலையில், கிறிஸ்தவ மிஷினரிகள் ஜானை காப்பாற்ற முயற்சிப்பதாக, பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
கடந்த வருடம் மே மாதம் மதபோதகர் ஜான் ஜெபராஜ் வீட்டில் பார்ட்டி ஒன்று நடந்துள்ளது..அதில், 14 வயது மற்றும் 17 வயது சிறுமிகள் கலந்து கொண்டுள்ளனர்.. அந்த 2 சிறுமிகளுக்கும் ஜான் பாலியல் தொல்லை தந்துள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து தரப்பட்ட புகாரில், கோவை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால், அதற்குள் மதபோதகர் ஜான் தலைமறைவாகியிருக்கிறார்.இவர் ஒரு மதபோதகர், எனவே இவருடைய ஆன்மீக பணியையும் கோவையில் தொங்கினார் ஏனென்றால், பாதிரியார் படிப்பு என்பது 7 வருடம் படிக்கக்கூடியது. இந்த இறையியல் படிப்புக்கு ஆங்கிலம், உள்ளிட்ட மொழிகள் தெரியவேண்டும். 5 முதல் 7 வருட காலம் முறையாக அனைத்தும் படித்து முடித்தால்தான், பாதிரியாராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படுவர்.இப்போது ஜான் தலைமறைவாக உள்ளார்.. சில கிறிஸ்தவ மிஷினரிகள் ஜானை காப்பாற்ற முயற்சி நடப்பதாக தெரிகிறது.ஏழை எளிய மக்கள் தேவாலயம் வருகிறார்கள்.ஆனால் ஜான் போன்ற பாதிரியார்களால் தேவாலயங்களின் புனிதம் கெட்டுவிடுகிறது.. ஆண்டவனால் திருத்த முடியாவிட்டாலும், கோவை மத்திய சிறை, ஜானை திருத்தி மனிதனாக மாற்றும்” என்று தெரிவித்துள்ளார்.

