
அசைவ உணவுப் பிரியர்கள் அனைவருக்கும் மிகப் பிடித்த உணவு என்றால் அது பிரியாணி தான். அதிலும் சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா வேண்டும். ஒவ்வொரு நபருக்கும் மிகவும் பிடித்த உணவுப்பட்டியல் என்று ஒன்று கண்டிப்பாக இருக்கும்.

அந்த உணவுப்பட்டியலில் கண்டிப்பாகச் சிக்கன் பிரியாணியும் இடம் பெற்றிருக்கும். அப்படி அனைவருக்கும் மிகப் பிடித்த உணவான ஆந்திரா கொண்டா ரெட்டி சிக்கன் பிரியாணியை இப்படி ஒருமுறை செய்து சுவைத்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1 கிலோ
பாசுமதி அரிசி – 2 கப்
பட்டை – 2
கிராம்பு – 5
ஏலக்காய் – 5
கல்பாசி – 2
ஜவித்ரி – 2

கசகசா – 2 டேபிள் ஸ்பூன்
மிளகு – 2 டேபிள் ஸ்பூன்
தனியா – 3 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 10 பற்கள்
சின்ன வெங்காயம் – 20
கஸ்த்தூரிமேத்தி – 2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 10
மஞ்சள்தூள் – 2 டீஸ்பூன்

சீரகம் – 2 டீஸ்பூன்
சோம்பு – 2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 4
தக்காளி – 2
கொத்தமல்லி – 1 கைப்பிடி அளவு
புதினா – 1 கைப்பிடி அளவு
எலுமிச்சை சாறு- 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் – 4
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் நாம் எடுத்துவைத்துள்ள 2 கப் பாசுமதி அரிசியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 1 மணிநேரம் நன்கு ஊறவைத்துகொள்ளுங்கள். அதேபோல் நாம் எடுத்துவைத்துள்ள 10 காய்ந்த மிளகாவையும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 1 மணிநேரம் நன்கு ஊறவைத்துகொள்ளுங்கள்.
அடுத்து ஒரு மிக்சி ஜாரில் 2 பட்டை, 2 கல்பாசி, 2 ஜவித்ரி, 5 கிராம்பு, 5 ஏலக்காய், 2 டேபிள் ஸ்பூன் கசகசா, 2 டேபிள் ஸ்பூன் மிளகு மற்றும் 3 டேபிள் ஸ்பூன் தனியா ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் கஸ்த்தூரிமேத்தி, 10 பற்கள் பூண்டு, 20 சின்ன வெங்காயம், 2 டீஸ்பூன் மஞ்சள்தூள், 2 டீஸ்பூன் சீரகம், 2 டீஸ்பூன் சோம்பு மற்றும் ஊறவைத்துள்ள 10 காய்ந்த மிளகாயையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு மசாலா பதத்திற்கு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பில் குக்கரை வைத்து அதில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றிக்கொளுங்கள். பிறகு அதனுடன் 4 பெரிய வெங்காயம், 2 தக்காளி, 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி மற்றும் 1 கைப்பிடி அளவு புதினா ஆகியவற்றை நன்கு பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
இவையெல்லாம் நன்கு வதங்கியவுடன் நாம் அரைத்துவைத்துள்ள மசாலாவையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 4 பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
இவையெல்லாம் நன்கு வதங்கியபிறகு அதனுடன் 1 கிலோ சிக்கனை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்துக் கொள்ளுங்கள்.
சிக்கன் நன்கு வெந்த பிறகு அதனுடன் நாம் ஊறவைத்துள்ள 2 கப் பாசுமதி அரிசியையும் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றிக் குக்கரின் மூடியை போட்டு மூடி 2 விசில் வரும்வரை நன்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
இப்பொழுது நமது ஆந்திரா ஸ்பெஷல் கொண்டா ரெட்டி சிக்கன் பிரியாணி ரெடி வாங்க சுவைக்கலாம். நீங்களும் இந்த ஆந்திரா ஸ்பெஷல் கொண்டா ரெட்டி சிக்கன் பிரியாணியை உங்கள் வீட்டில் செய்து சுவைத்துப்பாருங்கள்.

