
கல்யாண விருந்து எப்போதும் சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும். ஏனெனில், நாம் வழக்கமாக உண்பதற்கான உணவுகள் கூடக் கல்யாண விருந்தில் சாப்பிடும்போது அதிக சுவை பெறுகின்றன. கல்யாண பந்தியில் முதலில் பரிமாறப்படும் உணவு இனிப்பாகவே இருக்கும். கடந்த காலங்களில், ஆரம்பத்தில் கேசரி அல்லது இறுதியில் பாயாசம் வழங்கப்பட்டு வந்தது.
இப்போது, பல்வேறு இனிப்புகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, பல்வேறு வகையான அல்வாக்கள் பரிமாறப்படுகின்றன. தற்போது பிரபலமாகி வரும் ஒரு அல்வா சுரைக்காய் அல்வா ஆகும். வழக்கமான அல்வாவின் சுவையிலிருந்து மாறுபட்ட சுவை கொண்ட இந்த அல்வா தயாரிக்க எளிதானது மற்றும் சுவையானது. இந்தக் கல்யாண வீட்டு சுரைக்காய் அல்வா எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
தேவையானப் பொருட்கள்:
- 750 கிராம் சுரைக்காய் (தோல் நீக்கி விதை நீக்கியது)
- 1.5 லிட்டர் முழு கொழுப்புள்ள பால்
- கால் கப் நெய்
- 1/3 கப் பாதாம், முந்திரி மற்றும் திராட்சை
- ஒன்றரை கப் சர்க்கரை
- ஒரு சிட்டிகை பச்சை நிற புட் கலர்
- 2 தேக்கரண்டி நெய் (இறுதியாகச் சேர்க்க)
செய்முறை:
- சுரைக்காயை தோல் சீவி விதைகளை நீக்கி விட்டுத் துருவி வைத்துக் கொள்ளவும். துருவிய சுரைக்காயிலிருந்து தண்ணீரை முழுமையாகப் பிழிந்து எடுத்து விடவும்.
- அடி கனமான பாத்திரத்தில் 1.5 லிட்டர் முழு கொழுப்புள்ள பாலை கொதிக்க வைக்கவும்.
- பால் நன்றாகக் கொதித்து 500 மில்லியாகக் குறையும் வரை மிதமான தீயில் வைத்துக் கொதிக்க விடவும்.
- கெட்டியான பாலை ஓரமாக வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் கால் கப் நெய்யை சூடாக்கவும். பின்னர் அதில் நறுக்கிய பாதாம், முந்திரி மற்றும் திராட்சையைச் சேர்க்கவும். பொன்னிறமாக மணம் வரும் வரை வறுக்கவும், பின்னர் அவற்றை எடுத்துத் தனியாக வைக்கவும்.
- பின்னர் அதே பாத்திரத்தில், பிழிந்து வைத்திருக்கும் சுரைக்காயைச் சேர்க்கவும்.
- அவ்வப்போது கிளறி, அனைத்து ஈரப்பதமும் ஆவியாகும் வரை மிதமான தீயில் சமைக்கவும்.
- சுரைக்காய் நன்கு குலைந்து வந்ததும் அதில் ஒன்றரை கப் சர்க்கரையை சேர்க்கவும்.
- இதை நன்கு கலந்து, 10 நிமிடங்கள் மிதமான தீயில், கலவை கெட்டியாகும் வரை தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும்.
- பின்னர் கொதிக்கவைக்கப்பட் பாலை ஹல்வா கலவையில் ஊற்றவும்.
- நன்கு கிளறி, 5-7 நிமிடங்கள் மிதமான தீயில், அல்வா பாலை உறிஞ்சி ஒரு நிலைத்தன்மையை அடையும் வரை தொடர்ந்து கிளறவும்.
- நீங்கள் விரும்பினால் பச்சை நிற புட் கலரை சேர்த்து கிளறவும். இது முழுக்க முழுக்க உங்களின் விருப்பம் சார்ந்தது மட்டுமே.
- பின்னர் வறுத்த பாதாம், முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து அல்வாவை அடிபிடிக்கமால் நன்கு கிளறவும்.
- இறுதியாக 2 ஸ்பூன் நெய்யை சேர்க்கவும்.
