டீப்சீக் செயலிக்கு அதிரடி தடை!

Advertisements

தென் கொரியாவில் சீனாவைச் சேர்ந்த செற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலியான டீப்சீக்-ஐ டவுன்லோட் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பயனர் தரவுகளைக் கையாள்வது தொடர்பான மதிப்பீடு முடிவுக்கு வந்தபிறகு மட்டுமே இந்தச் செயலியை டவுன்லோட் செய்ய அனுமதி வழங்கப்படும் எனத் தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டீப்சீக்-இன் ஆர்1 சாட்பாட் அதன் அசாதாரண செயல்திறனால் உலகளவில் அதிகமான பயனர்களை விரைவில் ஈர்த்துள்ளது, இதனால் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஆனால், டீப்சீக் பயனர் தரவுகளைச் சேமிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததன் பின்னர், பல நாடுகளில் இந்தச் சேவைக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையில், பயன்படுத்துவதற்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

டீப்சீக் பயனர் தரவுகளை எவ்வாறு கையாள்கிறது என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *