தமிழர்கள் இந்தி கற்றுக்கொள்வைதே புத்திசாலித்தனம் – ZOHO நிறுவனர்!

Advertisements

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு ஏற்க மறுத்ததால், கல்விக்கான நிதி வழங்கல் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு, மும்மொழிக் கொள்கையை இந்தி திணிப்பின் புதிய வடிவமாகக் கருதுகிறது.

முதலில், மூன்றாவது மொழியாக எந்த மொழியையும் கற்கலாமெனக் கூறப்பட்டு, பின்னர் அந்த மொழிக்கான ஆசிரியர்களின் பற்றாக்குறையை காரணமாகக் கொண்டு, இந்தி மொழி ஆசிரியர்களை மட்டுமே நியமித்து, மாணவர்களை இந்தி கற்க கட்டாயமாக்குவார்கள் என விமர்சகர்கள் கணிக்கின்றனர்.

இந்தச் சூழலில், தமிழர்கள் இந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனமாகும் எனச் சோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.

டெல்லி மற்றும் மும்பையில் பணியாற்றும் சோஹோ பொறியாளர்களுக்கு உரையாற்றிய ஸ்ரீதர் வேம்பு, “இந்தியாவில் சோஹோ வேகமாக வளர்ந்து வருகிறது” என்றார்.

நமது வணிகத்தின் முக்கியமான பகுதி டெல்லி, மும்பை மற்றும் குஜராத்தில் நடைபெறுகிறது. எனவே, வணிக வளர்ச்சிக்காக இந்தி கற்றுக்கொள்வது அவசியமாகிறது. தமிழ்நாட்டில் இந்தி கற்றுக்கொள்ளாதது எங்களுக்கு ஒரு பெரிய தடையாகும். இந்தி கற்றுக்கொள்வது முக்கியமானது.

கடந்த 5 ஆண்டுகளில் நான் இந்தி கற்றுக்கொண்டேன். தற்போது இந்தியில் பேசப்படும் விஷயங்களில் சுமார் 20% எனக்குப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது, தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *