
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் தலைமை ராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரானின், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குலில், இரண்டு குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஈரான் தலைமை ராணுவம் கண்டனம் தெரிவித்து, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக அறிவித்தது.
மேலும், அமெரிக்கா போரை நிறுத்தத் தவறிவிட்டதாகவும், தன் வாக்குறுதிகளை மீறி துரோகம் இழைத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இதனால், சுவிட்சர்லாந்தில் இன்று நடைபெறவிருக்கும் அமெரிக்கா – ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.





