Israel Attacks Iran :ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் இந்தியா விமான சேவை பாதிப்பு!

Advertisements
ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதால், இந்தியாவில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் பயங்கரமான வான்வழித் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. தெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள் உள்ளிட்டவை குறித்து ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றது. இந்த தாக்குதல் நடவடிக்கை தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்ததால், நாடு முழுவதும் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.
இந்நிலையில், ஈரானில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டு, அந்நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளது. அதேபோல், ஈரான் பதில் தாக்குதல் நடத்தும் என்பதால், இஸ்ரேலும் தனது வான்வெளியை மூடியுள்ளது. இதன் காரணமாக ஈரான், இஸ்ரேல் வழியாக இந்தியாவுக்கு வரும் விமான சேவைகள்பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து புறப்பட்ட விமானங்கள் திரும்பி வருவதாகவும், லண்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் இருந்து தில்லி நோக்கி வரும் விமானங்கள், ஈரான் வான்வெளியை தவிர்த்து மும்பைக்கு மாற்றி அனுப்பப்பட்டிருப்பதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து ஈரான் வழித்தடத்தில் செல்லும் விமானங்கள் ரத்து செய்ய படுவதற்கு வாய் ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *