
ஆறு வயதுச் சிறுவனை 26 முறை கத்தியால் குத்திய அமெரிக்க முதியவர்…
அமெரிக்கா வாஷிங்டனில் 6 வயது பாலஸ்தீன சிறுவன், 26 கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் இஸ்ரேலைச் சேர்ந்தவர் என சந்தேகம் எழுந்துள்ளது.Illinois man
கடந்த சனிக்கிழமையன்று , அமெரிக்காவில், ஒரு இஸ்லாமிய பெண் மற்றும் அவரது மகன் எனக் கூறப்படும் 6 வயதுச் சிறுவன் ஆகிய இருவரையும் , 71 வயது முதியவர் 26 முறை கத்தியால் ஆக்ரோஷமாக குத்தியுள்ளார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அச்சிறுவன் உயிரிழந்தான்.
இந்தக் கொடூரத் தாக்குதலைச் செய்த முதியவர் ஜோசெப் ஒஜுபா இஸ்ரேலைச் சேர்நதவர் எனவும் ஹமாஸ் தாக்குதலுக்கு எதிராக இவர் செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அவரைக் கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்


