
மாலை நேரத்தில் பள்ளி முடிந்து பசியுடன் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்குச் சுவையான ஸ்நாக்ஸ் தயாரிக்க விரும்புகிறீர்களா? வீட்டில் 1/2 கப் உளுத்தம் பருப்பு இருந்தால், அதைப் பயன்படுத்தி ஒரு சிறந்த முறுக்கு தயாரிக்கலாம்.
இந்த உளுந்து முறுக்கு 10 நாட்கள்வரை மொறுமொறுவென்று இருக்கும். இதனைச் செய்வது மிகவும் எளிது. ஒருமுறை இதனைச் செய்து பார்த்தால், வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி இதைக் கேட்கும் அளவிற்கு இது ருசிகரமாக இருக்கும்.
உங்களுக்கு உளுந்து முறுக்கு செய்வது எப்படி என்பதைப் பற்றிய தகவல் தேவைவா? கீழே உளுந்து முறுக்கையின் எளிய செய்முறை வழங்கப்பட்டுள்ளது. அதைப் படித்துச் செய்து, உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிரவும்.
தேவையான பொருட்கள்:
- உளுத்தம் பருப்பு – 1/2 கப்
- பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
- தண்ணீர் – 3 கப்
- அரிசி மாவு – 4 கப்
- உப்பு – 1/2 டீஸ்பூன்
- ஓமம் – 1/4 டீஸ்பூன்
- மிளகாய் தூள் -1/4 டீஸ்பூன்
- எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
- முதலில் குக்கரில் 1/2 கப் உளுத்தம் பருப்பை எடுத்து, அதை நீரில் 3-4 முறை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
- பின் அதில் பெருங்காயத் தூள் சேர்த்து, 3 கப் நீரை ஊற்றி, குக்கரை அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
- விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை குளிர வைக்க வேண்டும்.
- பருப்பு குளிர்ந்ததும், அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்ததை எடுத்து, அத்துடன் அரிசி மாவு, உப்பு, ஓமம், மிளகாய் தூள் சேர்த்து, முறுக்கு மாவு பதத்திற்கு நன்கு மென்மையாகப் பிசைந்து கொள்ள வேண்டும்.
- பின் முறுக்கு உழக்கை எடுத்து, அதில் விருப்பமான முறுக்கு அச்சை வைத்து, பிசைந்து வைத்துள்ள மாவை வைத்து நிரப்ப வேண்டும்.
- பின்பு அதை முறுக்குகளாக ஒரு துணியில் பிழிந்து கொள்ள வேண்டும்.
- இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றிச் சூடானதும், பிழிந்து வைத்துள்ள முறுக்குகளைப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்து எடுத்தால், சுவையான உளுந்து முறுக்கு தயார்.
