புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம்!

Advertisements

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று (பிப்ரவரி 18-ம் தேதி) ஓய்வு பெறுகிறார். இதனால், புதிய தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்க மத்திய அரசு தீவிர முயற்சியில் உள்ளது. தேர்தல் ஆணையர்களின் நியமனத்தைப் பற்றிய விவகாரத்தில், பிரதமர் முன்மொழியப்படும் நபரை ஜனாதிபதி நியமிக்கிறார்.

தேர்தல் ஆணையர்கள் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், மத்திய அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, பிரதமர் தலைமையில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுத் தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும். இந்தக் குழுவில் ஒரு மத்திய அமைச்சர் மற்றும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் இடம் பெறுவர்.

இந்தச் சூழ்நிலையில், ராஜீவ் குமார் ஓய்வுக்கு பிறகு அடுத்த ஆணையர் யார் என்பதை தீர்மானிக்க இந்தக் குழு நேற்று கூடியது. பிரதமர் தலைமையிலான இந்தக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *