
கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகில் 4.5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
சென்னை: கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகில் உள்ள ₹800 கோடி மதிப்புடைய 4.5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது. செங்கல்பட்டு ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனை அடுத்து, இந்நிலத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்து இயங்கி வந்த, அரசுடைமை வங்கி, கிறிஸ்தவ மதப் பிரச்சார கூடம், வீடுகள் உள்பட 30 கட்டிடங்களுக்குச் சீல் வைக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரம் மூலம் கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது. Guindy Kathipara Junction


