குரூப் 2, 2ஏ தேர்வுகள் மார்ச் 15-ல் நடைபெறும் – டிஎன்பிஎஸ்சி.!

Advertisements

டி.என்.பி.எஸ்.சி. சார்பில், ஒத்திவைக்கப்பட்டிருந்த குரூப் 2, 2ஏ தேர்வுகள் மார்ச் மாதம் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மைய குளறுபடி காரணமாக நேற்று நடைபெறவிருந்த குரூப் 2, 2ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், வரும் மார்ச் மாதம் 15-ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

வரும் பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 22-ல் நடைபெறவிருந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி-ஐ.ஐ.க்கான முதன்மை தேர்வு அதே தேதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *