
V. Senthil Balaji | Enforcement Directorate | Raid
செந்தில் பாலாஜியின் 60 நில ஆவணங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது…
சென்னை : கணக்கில் வராத 22 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. சென்னை, கரூரில் கடந்த 3-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள்குறித்த தகவல்களை அமலாக்கத்துறை தற்போது வெளியிட்டுள்ளது.
V. Senthil Balaji | Enforcement Directorate | Raid
இதன்படி கணக்கில் வராத 22 லட்சம் ரூபாய் ரொக்கம், 16.6 லட்சம் ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத விலை உயர்ந்த பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செந்தில் பாலாஜியின் 60 நில ஆவணங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

