priyanka Gandhi : இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்!

இந்தியா: வயதாகி வரும் இளைஞர்களுக்கு கோடிக்கணக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குமாறு பிரதமர் மோடிக்கு பிரியங்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, சில நாட்களுக்கு முன்பு, மும்பையில் பேசிய பிரதமர் மோடி, கோடிக்கணக்கான போருக்கு வேலைவாய்ப்பு அளித்து முந்தைய சாதனைகளை முறியடித்து இருப்பதாக கூறினார். இந்நிலையில், ஒரு சில காலியிடங்களுக்காக வேலையில்லாத இளைஞர்கள் கூட்டம் பெருமளவில் திரண்டு வந்த வீடியோ வைரல் ஆகியுள்ளது. மேலும், குஜராத்தில் 25 காலியிடங்களுக்காக ஒரு ஓட்டலில் 15 லட்சம் இளைஞர்கள் திரண்டு வந்தனர்.

இதனால் நெரிசல் போன்ற சூழ்நிலை ஏற்பட்டது. இதையெல்லாம் பார்த்தால், நாடு சரித்திர வேலைவாய்ப்பின்மையை சந்தித்து வருகிறது என பதிவிட்டிருந்தார். மேலும், வெற்று வாக்குறுதிகள் அளிப்பதையும், திசைதிருப்புவதையும் நிறுத்திவிட்டு, இளைஞர்களை பற்றி சிந்திக்குமாறு பிரதமர் மோடியை கேட்டுக்கொள்கிறேன் என்றும், வயதாகி வரும் இளைஞர்களுக்கு கோடிக்கணக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குமாறு வலியுறுத்துகிறோம் என்றும் பிரியங்கா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *