டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!!

Advertisements

எலான் மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனப் பங்குகளின் சரிவால் தனது டிரில்லியனர் அந்தஸ்தை இழந்துள்ளார்.

உலகின் முதல் டிரில்லியனர் என்ற எலான் மஸ்க்கின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. ஜூன் 16-ஆம் தேதியன்று 1.32 டிரில்லியன் டாலர் என்ற சாதனை அளவை எட்டிய எலான் மஸ்க்கின் நிகர மதிப்பு, தற்போது 957 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. எலான் மஸ்க்கின் இந்தச் சரிவு, பங்குச்சந்தையின் நிலையற்ற தன்மையை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் போன்ற அதிநவீன தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள், முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் சந்தையின் போக்கையும் பொறுத்து மின்னல் வேகத்தில் ஏறுவதும், அதே வேகத்தில் இறங்குவதும் இயல்பான ஒன்றாக மாறியுள்ளது. எதிர்காலத்தில் ஸ்பேஸ்எக்ஸ் மீண்டும் தனது முந்தைய உச்சத்தைத் தொடுமா அல்லது புதிய தொழில்நுட்ப மைல்கற்கள் மூலம் தனது பங்கு மதிப்பை நிலைப்படுத்துமா என்பது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் எலான் மஸ்க் டிரில்லியனர் அந்தஸ்தைத் தற்காலிகமாக இழந்தாலும், உலகப் பொருளாதாரத்தில் எலான் மஸ்க்கின் ஆதிக்கம் குறையவில்லை என்பதே நிதர்சனமான உண்மை என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *