
புரட்டாசி மாதத்தில் செய்யக்கூடிய ஸ்பெஷலான பெருமாளுக்கு மிகவும் பிடித்த எள்ளு சாதம் எப்படி செய்வது என்பதை பற்றித் தான் பார்க்கப் போகிறோம்.
எள்ளு – 4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
வர மிளகாய் – 6
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்
எள்ளு சாதம் செய்யத் தேவையான பொருட்கள்:
நெய் – 2 ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 தேக்கரண்டி

கடுகு – 1 ஸ்பூன்
வேர்க்கடலை – சிறிதளவு

காய்ந்த மிளகாய் – 2
எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு
அரைத்து வைத்துள்ள எள்ளு பொடி
எள்ளு சாதம் செய்முறை:
முதலில் ஒரு கடாயை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் எண்ணெய் சேர்க்காமல் கடலைப்பருப்பு, எள்ளு, உளுத்தம் பருப்பு, மிளகாய், தேங்காய் துருவல் போன்ற பொருட்களை எல்லாம் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் வறுத்த இந்தப் பொருட்களை நன்றாக ஆறவிட்டு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது கடாயில் எண்ணெய் தேவையான அளவு ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடான பிறகு அதில் தேவையான அளவு உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கடுகு, பெருங்காயத்தூள், முந்திரி பருப்பு, வேர்க்கடலை, வர மிளகாய், கருவேப்பிலை போன்ற பொருட்களைச் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். பின் நாம் வடித்து வைத்துள்ள சாதத்தை இதில் சேர்த்து அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள எள்ளு பொடியைச் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். கடைசியாக 2 ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும்.அவ்வளவு தான் மிகவும் ருசியான சத்தான எள்ளு சாதம் ரெடி… இதுபோல எள்ளு சாதம் நீங்களும் செய்து சாப்பிடுங்கள்..!


