விருதுநகரில் நடைபெறுகிற திமுக தென்மண்டல இளைஞர் அணி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் திமுக தென்மண்டல இளைஞர் அணி மாநாடு நடைபெறுகிறது. இதற்காக, பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் ஆகியார் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். தொடர்ந்து, மாநாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.


