
வரலாறு காணாத வகையில் கலைஞர் ஆண்ட திராவிடத்தில் சில திருப்புமுனைகளும், திடுக்கிடும் தகவல்களும் 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவில் பெரிய அளவிலான மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அது என்ன மாற்றம் என்பதை ஜெம் தொலைக்காட்சி வாயிலாகப் பார்க்கலாம்
அப்படி வந்துகொண்டிருக்கின்ற அந்த தகவல் அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழகத்திலே மிக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் திமுக அமைச்சரும், தற்போது தீய சக்தி திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் மாற்றப்படுவாரா? என்ற கேள்வி திமுக அறிவாலயர்கள் மத்தியில் மடைதிறந்த வெள்ளம்போல் ஓடிக் கொண்டிருக்கிறது.
இது ஒரு பக்கம் ஒடி கொண்டிருக்கையில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு புதிய பொறுப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வியும் கட்சிக்குள்ளே எழுந்திருக்கிறது.மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விகள் கட்சிக்குள்ளும் வெளியிலும் அதிமுகமாக கேட்கப்படுகின்றனர். இந்த புதிருக்கான விடை விரைவில் கிடைக்கும் என்கின்றனர் திமுகவினர்.சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக எதிர்பாராத தோல்வினா தோல்வி படுதோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து, தோல்விக்கான காரணங்களை ஆராய 36 பேர் கொண்ட கள ஆய்வுக் குழுவை தீயசக்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்திருந்தார். அந்தக் குழுக்கள் தமிழகம், முழுவதும் கொடைக்கானல் ’சுற்றுலா செல்வதுபோல் சென்று சுற்றுப்பயணம் செய்து கட்சி நிர்வாகிகள் மக்கள் மழையில் குளித்து மகிழ்வது போல மக்களிடம் திமுக தோல்வியுற்ற கருத்துகளை சேகரித்தன.
அதேபோல், பொதுமக்கள் மற்றும் கட்சியினரின் கருத்துகளை பெறுவதற்காக இணையதளம் மூலமாகவும் கருத்துக்கள் பெறப்பட்டன. தற்போது அந்த அறிக்கைகள் மற்றும் கருத்துகள் அனைத்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கைக்கு தாவியிறுப்பதாக சொல்லப்படுகிறது.
திமுக இதையடுத்து கட்சி அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் வரலாம் என்ற தகவல்கள் பரவத் தொடங்கியுள்ளன. மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள் அதுபோல இப்போது நடந்திருக்கும் தோல்விக்கு இனி வரும் காலங்களில் மாற்றம் கிடைக்குமா என்று கட்சிக்குள்ளே சந்தேகம் எழத் தொடங்கிருக்கிறது.
குறிப்பாக மூத்த தலைவர் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை மாற்றிவிட்டு புதிய நபரை நியமிக்கலாம் என்ற பேச்சு அதிகமாக பேசப்படுகிறது. திமுகவைப் பொறுத்தவரை தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச்செயலாளர்கள் ஆகியோரே கட்சியின் உயர்மட்ட நிர்வாகமாக கருதப்படுகின்றனர். இதில் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை பொதுக்குழுவே தேர்வு செய்கிறது.
காரணம், துரைமுருகன் இன்னும் கட்சி பணிகளில் இந்த இளம் வயதில் ஒடற பாம்பை மிதிக்கிற வயசு என்பார்களே அதுபோல இவர் உடல் முதிர்ந்தாலும் இன்னும் திமுகவில் பாம்பை மிதிப்பதற்கு வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார் என்றே சொல்லாம்.இப்படி தீவிரமாக செயல்பட்டு வரும் இவர் சமீபத்தில்கூட வழக்கம்போல் அறிவாலயத்திற்கு வந்து தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியதுடன், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து கலந்துரையாடிவிட்டு அனைவரிடமும் தன் தலையை காட்டிவிட்டுதான் சென்றிருக்கிறார்.
அவரது உடல்நிலை குறித்து சில தகவல்கள் வெளியான நிலையில், தன்னைப் பற்றிய சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் கட்சி அலுவலகத்திற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்களைப் பற்றிய முடிவுகளை மு.க.ஸ்டாலின் அவசரமாக எடுப்பதில்லை என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆக பொதுச்செயலாளர் மாற்றம் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்த முடியாது என கூறப்படுகிறது.



