
டில்லி காவல் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று துணை காவல் ஆய்வாளராகப் பணியிலிருந்த பெண் காவலர் இரண்டு வருடங்களுக்கு முன்பு காணாமல் போனார்.
மோனிகா யாதவ் எனும் பெண் காவலர் வழக்கில் அவருடன் பணியாற்றிய சுரேந்திர சிங் ரானா எனும் காவலரைக் காவல்துறை கைது செய்தது.
ரவீந்திர யாதவ் போலீஸ் கமிஷ்னர் கூறுகையில் ரானா, அவரின் சகலை, மற்றும் அவரின் நண்பர் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.
யாதவை கொலை செய்து வட டில்லியில் உள்ள ஒரு சாக்கடையில் அவரது உடலை வீசி விட்டத்தாகத் தெரிவித்தார். ரானா கூறிய தகவலின் படி எலும்புகளைக் கைப்பற்றி டிஎன்ஏபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் பயிற்சி கல்லூரியில் 2014-ல் ஒன்றாகப் பயிற்சி பெற்றுள்ளனர். யாதவ் சப் இன்ஸ்பக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்று யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வந்துள்ளார். பயிற்சியின் போதே யாதவை திருமணம் செய்து கொள்ள ரானா விரும்பியுள்ளார். ஆனால் யாதவோ நிராகரித்துள்ளார்.
அதனால் ஆத்திரமடைந்த ரானா, யாதவை தீர்த்துக் கட்ட திட்டமிட்டார். அதற்கான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார் ரானா. அதே போல் அவரைப் பிந்தொடர்ந்து சென்று புராரி புஷ்கிதா எனும் இடத்தில் வைத்துத் திட்டம் தீட்டியபடியே கொன்று சாக்கடையில் வீசினார்.ஆனால் ரானா, யாதவ் உயிரோடு இருப்பதாகவே, யாதவின் பெற்றோர்களிடத்தில் கூறி வந்துள்ளான்.
இரண்டு வருடங்களாக விசாரித்தும் உள்ளூர் காவல் நிலையத்தாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.


