D.K.Sivakumar :மேகதாது அணை கட்டினால் கர்நாடகாவை விட தமிழகமே அதிக பயன்பெறும்!

Advertisements

இரண்டு மாநிலத்திற்கும் வருண பகவான் உதவுவார் என கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

சென்னை:கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் சென்னை சேத்துப்பட்டில் இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தை பார்வையிட்டு, செயல்பாடுகளை கேட்டறிந்தார். திடக்கழிவு மேலாண்மை குறித்தும் ஆய்வு செய்தார். பெங்களூருவில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவது தொடர்பாக சென்னையில் ஆய்வு செய்துள்ளார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மேகதாது அணை தொடர்பான கேள்விகளுக்கு அவர் பதிலளித்து பேசியதாவது;

“மேகதாதுவில் அணை கட்டினால் கர்நாடகாவை விட தமிழகமே அதிக பயன் பெறும். மேகதாது அணை குறித்து தற்போது எதுவும் பேச விரும்பவில்லை. இரண்டு மாநிலத்திற்கும் வருண பகவான் உதவுவார்.” என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *