Vagaikulam Toll Plaza: 50% கட்டணம் வசூலிக்க நீதிமன்றம் உத்தரவு!

Advertisements

கடந்த 6 ஆண்டுகளாகச் சாலை ஏன் மோசமாக உள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார்… Vagaikulam Toll Plaza

தூத்துக்குடி – நெல்லை சாலையில் உள்ள வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க மதுரை நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு அளித்துள்ளனர்.

சாலை குண்டும் குழியுமாக இருப்பதை சுட்டிக்காட்டி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு அளித்துள்ளது. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சர்வின் ராயன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் கடந்த 6 ஆண்டுகளாகச் சாலை ஏன் மோசமாக உள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் தூத்துக்குடி – நெல்லை சாலையில் உள்ள வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவு அளித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *