Coimbatore – Farmers Arrest: ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது!

Advertisements

டெல்லியில் போராடி வரும் விவாசியகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய பாஜக அரசைக் கண்டித்து கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

விவசாயிகளின் விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“டெல்லி சலோ” என்ற பெயரில் நடத்தப்பட்டு வரும் இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதி தமிழர் பேரவை, தமிழக வாழ்வுறிமை கட்சியினர் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி  ஒன்றிய அரசைக் கண்டித்து கோசங்களை எழுப்பியவாறு கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.

அவர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.  இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களைப் போலீசார் கைது செய்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *