வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

Advertisements

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செம்பியன்மகாதேவியை சேர்ந்தவர் முருகதாஸ்.

இவரது மகன் கவியழகன் (வயது 13). இவர் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நள்ளிரவு முருகதாஸ் குடும்பத்தினருடன் தனது கூரை வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் மாணவன் கவியழகன் இடிபாடுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உடனே கவியழகனை மீட்டு ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கவியழகன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மதியழகன், அவரது மற்றொரு மகள் லேசான காயத்துடன் உயிர்தப்பினார்.

இந்தச் சம்பவம்குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *