
பீகாரில் பெண்களை கர்ப்பமாக்கிய ஆண்களுக்கு ரூ.13 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பலைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
அகில இந்திய கர்ப்பிணி வேலை சேவை” என்ற பெயரில் ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
பீகாரில் அரங்கேறிய கொடூரம். அதாவது கர்ப்பமாக விரும்பும் பெண்கள் முதலில் ரூ.799 பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். அவர்கள் பதிவு செய்தவுடன், அந்த கும்பல் சில புகைப்படங்களை அவர்களிடம் கொடுத்து, தாங்கள் கர்ப்பமாக விரும்பும் ஒரு பெண்ணை தேர்வு செய்யுமாறு கூறியது.
பீகாரில் கருத்தரிக்க முடியாத பெண்களை கர்ப்பமாக்க ஆண்களுக்கு ரூ.13 லட்சம் தருவதாக கூறிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அகில இந்திய கர்ப்பிணி வேலை சேவை” என்ற பெயரில் இந்த மோசடியை அவர்கள் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
பீகாரின் நவாடாவில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஆண்களைத் தொடர்பு கொள்வார்கள், அவர்களின் “சேவைக்கு” ஈடாக லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்குவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
விருப்பமுள்ளவர்கள் ரூ.799 பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். அவர்கள் பதிவு செய்தவுடன், அந்த கும்பல் சில புகைப்படங்களை அவர்களிடம் கொடுத்து, தாங்கள் கர்ப்பமாக விரும்பும் ஒரு பெண்ணை தேர்வு செய்யுமாறு கூறியது. பின்னர் அந்த பெண் எவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறார் என்பதைப் பொறுத்து ₹ 5 முதல் 20,000 வரை பாதுகாப்புத் தொகையை டெபாசிட் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
அந்த பெண் கர்ப்பமானால் ரூ.13 லட்சம் வழங்கப்படும் என்று ஆண்களிடம் கூறப்பட்டது. அந்தப் பெண்ணை கர்ப்பமாகவில்லையெனில் அவர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது” என்று நவாடாவின் காவல்துறை கண்காணிப்பாளர் கல்யாண் ஆனந்த் கூறினார்.
பீகார் காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) நவாடாவில் சோதனை நடத்திய பின்னர் இந்த கைதுகள் செய்யப்பட்டன. சம்பவ இடத்தில் இருந்து மொபைல் போன்கள் மற்றும் ஒரு பிரிண்டரை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் பலர் தப்பியோடிவிட்டனர். இந்நிலையில் தப்பிய குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
இப்படியான கொடூர செயலில் ஒரு பெரிய நெட் ஒர்க் செயல்படுவதாகவும், இந்த ஆண்கள் நாடு தழுவிய சைபர் சிண்டிகேட்டின் ஒரு பகுதியாக உள்ளனர் என்று கல்யாண் ஆனந்த் கூறினார். விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை தொடரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

