5 ஆவது முறையாக தங்கம் வென்ற தமிழக வீராங்கனை பவானி தேவி!

Advertisements

பவானி தேவி 38 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் 5 ஆவது முறையாகத் தங்கப்பதக்கம் வென்றார். தமிழ்நாடு 60 பதக்கங்களுடன் 6 ஆவது இடத்தில் உள்ளது.

தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவி 5 ஆவது முறையாகத் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் 7 நகரங்களில், 38 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில், மகளிருக்கான வாள்வீச்சில் தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தேவி, ஹரியானா வீராங்கனையை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஹரியானா வீராங்கனையை 15-க்கு 6 என்ற புள்ளி கணக்கில் பவானி தேவி வீழ்த்தினார்.

இதன் மூலம், தொடர்ந்து 5 ஆவது முறையாக, தேசிய விளையாட்டு போட்டியில், பவானி தேவி தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

தேசிய விளையாட்டு போட்டியைப் பொறுத்தவரை, 16 தங்கம், 22 வெள்ளி உட்பட 60 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில், தமிழ்நாடு 6 ஆவது இடத்தில் உள்ளது.

SSCB எனப்படும் இந்திய பாதுகாப்பு படை அணி முதலிடத்திலும், கர்நாடகா இரண்டாவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *