“கண்டா வரச் சொல்லுங்க”- MP க்கு எதிரான சுவரொட்டியால் பரபரப்பு!

Advertisements

திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினரைக் கண்டா வரச் சொல்லுங்க என முக்கிய சாலைகளில் சுவரொட்டி ஓட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவிவருகிறது.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற திண்டுக்கல்  பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர் திமுகவைச் சேர்ந்த வேலுச்சாமி, தற்போது வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கும் திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்து வருகிறார்.

இந்தநிலையில் இன்று திண்டுக்கல் மாநகராட்சியின் முக்கிய சாலையான பேருந்து நிலையத்திலிருந்து கரூர் செல்லும் சாலை. பழனி சாலை.சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.

RM காலனி சாலை உள்ளிட்ட அதிக போக்குவரத்து மிகுந்த பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் பாராளுமன்ற உறுப்பினரைக் கண்டா வரச் சொல்லுங்க எங்கள் தொகுதி எம்.பி யைக்காணவில்லையெனப் போஸ்டர் ஒட்டியதால் தற்போது பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் போஸ்டர் ஒட்டியவர்கள் யாரெனத் தெரியப்படுத்தாமல் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பொதுமக்கள் இன்று மட்டும் ஒட்டி உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *