அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – துணை முதல்வர் தொடங்கி வைத்தார்

Advertisements

பொங்கல் பண்டிகையை ஒட்டித் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறுகிறது. பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் துவங்கிய ஜல்லிக்கட்டு, மாட்டுப் பொங்கல் தினத்தில் பாலமேட்டில் நடைபெற்றது.

அந்த வரிசையில், உலகளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் துவங்கியது. இதனைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்தப் போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்கின்றன.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியைக் காண நேற்று இரவு முதல் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.

இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகள், 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *