அதிமுக உறுப்பினர் சேர்க்கையில் மோசடி செய்த வட்டச் செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம்!

Advertisements

அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கையில் மோசடி நடப்பதாக ஊடகங்களில் பேட்டியளித்த, மதுரையைச் சேர்ந்த வட்டச் செயலாளர் உதயகுமாரை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

அதிமுக கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறிக் கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த உதயகுமார் (15 கிழக்கு வட்டக் கழகச் செயலாளர்). இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *