
அ.தி.மு.க. கோமா நிலையில் உள்ளது என அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்துள்ளார்.
சென்னை, மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவில் புனரமைப்பு பணியைப் பார்வையிட்டப்பின் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, 210 தொகுதிகளோடு நிறுத்திவிட்ட எடப்பாடி பழனிசாமி 234 தொகுதிகளிலும் வெல்வதாகக் கூறியிருக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து அவர், அ.தி.மு.க. கோமா நிலையில் உள்ளனர் என கூறினார். பின்னர் தை மாதத்திற்குள் 4 ஆயிரம் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த இருப்பதாகத் தெரிவித்தார்.


