
Actress Reba Monica John : கர்நாடகாவில் கடந்த 1994ம் ஆண்டு பிறந்த நடிகை தான் ரெபா மோனிகா ஜான். கடந்த 2016ம் ஆண்டு முதல் இவர் கலை உலகில் பயணித்து வருகிறார்.
தனது சினிமா வாழ்க்கையை மலையாள திரைப்படங்களில் நடித்ததன் மூலம் துவங்கிய மோனிகா, கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஜெய்யின் “ஜருகண்டி” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தளபதி விஜயின் “பிகில்” திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த அனிதா என்கின்ற கதாபாத்திரம், தமிழ் மக்கள் மனதில் ரெபா மோனிகா ஜானுக்கு ஒரு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது என்றால் அது மிகையல்ல.
தொடர்ச்சியாக மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இவர் நடித்து வருகிறார். இறுதியாகத் தமிழில் “அவள் பெயர் ரஜ்னி” என்கின்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.
தற்பொழுது கன்னட மொழியில் உருவாகி வரும் “சகலகலா வல்லபா” என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். மலையாள மொழியில் ஒளிபரப்பான சில ரியாலிட்டி ஷோக்களிலும் இவர் பங்கேற்று உள்ளார்.

