
Actress Iswarya Menon : கேரளாவை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், ஈரோட்டில் பிறந்து தற்பொழுது தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துவரும் நடிகைதான் ஐஸ்வர்யா மேனன்.
கடந்த 1995 ஆம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி ஈரோட்டில் பிறந்த நடிகை தான் ஐஸ்வர்யா மேனன். இவர் அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பையும் முடித்தார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “காதலில் சொதப்புவது எப்படி” என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் தனது கலை உலக பயணத்தைத் தொடங்கினார்.
அதன் பிறகு தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த ஐஸ்வர்யா மேனனுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “தமிழ் படம் 2″ நல்ல வரவேற்பை கொடுத்தது.
இறுதியாகத் தமிழில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான வேழம்” திரைப்படத்தில் நடித்திருந்த ஐஸ்வர்யா மேனன் தற்பொழுது தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் தொடர்ச்சியாகப் படங்களில் நடித்த வருகிறார்.

