
தமிழ்நாட்டில் சாதாரண பெயிண்டராக சென்னையில் வேலை பார்த்து , தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை வகுத்தவர் தான் நடிகர் சூரி . இவர் நடித்த பல படங்கள் மக்கள் மனதில் இடம் பெற்றது . இந்நிலையில் , ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட செயல் கவனத்தை ஈர்த்துள்ளது.
சூரியின் இந்த செயலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.சூரி நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் வெளியான படம் ‘மாமன்’. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில், எக்ஸ் தளத்தில் ரசிகர் ஒருவர், நடிகர் சூரியை டேக் செய்து, “உங்கள் பட ஷூட்டிங் எங்கள் ஊரில் நடப்பது மகிழ்ச்சி. இரவு நேர படப்பிடிப்பில் வேடிக்கை பார்க்க வரும் எங்கள் பகுதி மக்களிடம், உங்கள் பவுன்சர்கள் கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள சூரி, “உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. படப்பிடிப்பில் ஏற்பட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இதைத் தயாரிப்புக் குழுவிடமும், பவுன்சர் சகோதரர்களிடமும் தெரிவித்து மிகுந்த கவனத்துடன் இருக்கச் சொல்கிறோம். எப்போதும் போல உங்கள் அன்பே எங்களுக்கு பலம்” என்று பதிவிட்டுள்ளார்.



