குடிபோதையில் கார் ஓட்டிய நடிகர் கைது!

Advertisements

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பையனூர் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி. மலையாள திரைப் பட நடிகரான இவர் சம்பவத்தன்று இரவு தனது காரில் வேகமாகச் சென்றுள்ளார். அங்கமாலி-களமச்சேரி இடையே தேசிய நெடுஞ்சாலையில் இருந்த சிக்னல்களை மதிக்காமல் போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகமாகச் சென்றிருக்கிறார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார், அத்தானி மற்றும் ஆலுவா பகுதியில் காரை நிறுத்துமாறு சைகை காண்பித்துள்ளனர். ஆனால் அதன்பிறகும் நடிகர் தனது காரை நிறுத்தாமல் வேகமாகவும், தாறுமாறாகவும் காரை ஓட்டிச் சென்றார். இதையடுத்து நடிகரின் காரைப் போலீசார் தங்களின் வாகனத்தில் காரைப் பின்தொடர்ந்து சென்றனர்.

களமச்சேரி பகுதியில் நடிகரின் காரைப் போலீசார் தடுத்து நிறுத்தினர். காரில் இருந்த நடிகர் கணபதிக்கு மது பரிசோனை செய்யப்பட்டது. அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நடிகரைப் போலீசார் கைது செய்தனர். பின்பு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அவர்மீது குடி போதையில் ஆபத்தான முறையில் வானம் ஓட்டியதாகவும், போலீசாரின் அறிவுறுத்தல்களை மீறியதாகவும் வழக்கு பதியப்பட்டது. குடிபோதையில் காரை வேகமாகவும், தாறு மாறாகவும் காரை ஓட்டிச் சென்ற நடிகரைப் போலீசார் கைது செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *