pmmodi:சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது நாட்டின் வரலாற்றின் முக்கியமான தருணம்!

Advertisements

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான சட்டப்பிரிவு 370 கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி நீக்கப்பட்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த சட்டப்பிரிவு 370-ஐ நீக்கி 5 வருடங்கள் முடிவடைந்த நிலையில், 6-வது வருடம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க தருணம் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், “ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்காக எங்கள் அரசாங்கம் தொடர்ந்து உழைத்து அவர்களின் அபிலாஷைகளை வரும் காலங்களில் நிறைவேற்றும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

ரத்து செய்யப்பட்டதன் மூலம் வளர்ச்சியின் பலன்களை இழந்த பெண்கள், இளைஞர்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் விளிம்புநிலை சமூகங்களுக்குப் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் வாய்ப்பு கிடைத்ததுள்ளன.

அதே நேரத்தில், ஜம்மு காஷ்மீரில் பல தசாப்தங்களாக ஆட்கொள்ளப்பட்ட ஊழலைத் தடுத்து நிறுத்துவதை உறுதி செய்துள்ளது” எனப் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *