
Nagercoil Bus Stand | Young Couple | Instagram
நாகர்கோவிலில் இன்ஸ்டா ரீல்ஸ்லைக்குகளுக்கு ஆசைப்பட்டு பஸ் நிலையத்தில் வாலிபர் இளம்பெண்ணைத் தூக்கியபடி வலம் வந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது…
நாகர்கோவில் : இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தளத்தில் ரீல்ஸ் வெளியிடுவதற்காக நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் தூக்கி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் நேற்று முன் தினம் மாலை வழக்கமான கூட்டம் காணப்பட்டது. பள்ளி, கல்லூரி முடிந்து மாணவ – மாணவிகளும், வேலைக்குச் சென்று ஆண்களும், பெண்களும் பஸ்சுக்காகக் காத்திருந்தனர். அப்போது பஸ் நிலையத்திற்கு இளம்பெண்ணும், வாலிபரும் அங்கு வந்தனர்.
திடீரென இளம்பெண்ணை, அந்த வாலிபர் தூக்கியபடி நடந்து சென்றார். சிரித்தபடியும், அந்த இளம்பெண்ணைக் கொஞ்சியபடியும் தூக்கிச் சென்றார். அதை ஒருவர் வீடியோ பதிவு செய்தார். முதலில் அந்த இளம் ஜோடியின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் சினிமா படப்பிடிப்பாக இருக்கலாமெனக் கருதினர். ஆனால் அவர்கள் சினிமா படப்பிடிப்பு நடத்தவில்லை. சமூக வலைத்தளத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்சில் பதிவிடுவதற்காக வீடியோ எடுக்கிறார்கள் என்பதும் தெரியவந்தது.
Nagercoil Bus Stand | Young Couple | Instagram
இதைத் தெரிந்து கொண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து விசாரித்ததில் இளம்பெண்ணும், வாலிபரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்றும், சமூகவலைதளங்களில் வெறும் லைக்குகளுக்கு ஆசைப்பட்டு இது போன்ற செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இது போன்ற செயல்களில் இளைஞர்களும், இளம்பெண்களும் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



