
செர்பியாவில் வன்முறை. முகமூடி அணிந்து தாக்குதல். அதிகாரிகள் உட்பட 3 பேர் பலி…
கொசோவாவில் மடாலயம் ஒன்றுக்கு நம்பர் பிலேட்இல்லாத கனரக வாகங்களில் வந்த 30-க்கும் மேற்பட்ட செர்பியர்கள் கும்பலாக வந்து நடத்திய தாக்குதலில் ஒரு அதிகாரி மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் 3 பேர் உயிரிழந்தனர். செர்பியா, மத்திய ஐரோப்பாவில் உள்ளது. கொசோவா என்ற இடத்தில் அல்பேனியர்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.கடந்த 2008- ஆம் ஆண்டு, கொசோவா தன்னை தனி நாடாக அறிவித்துக் கொண்டது.
செர்பியர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். அல்பேனியர்கள் அங்குப் பெரும்பான்மையினராக உள்ளனர். இந்த இரு பிரிவினருக்கும் இடையில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுவதுண்டு. பல சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வந்தது.
இந்நிலையில் சமீபத்தில் முகமூடி அணிந்த சிலர் திடீரென்று கொசோவாவினர் மீது எரி குண்டுகலை வீசி நடத்திய தாக்குதலில், ஒரு ராணுவ அதிகாரி உட்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் பலர் காயமுற்றுள்ளாதாகத் தெரிகிறது. இந்த அசம்பாவிதம்குறித்து பெல்கிரேடு மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார் செர்பிய அதிபர் கன்மென். பெல்கிரேடு, அல்பேனியர்களுக்கு ஆயுதம், பொருளாதாரம் ஏன அனைத்து விதத்திலும் உதவி செய்கிறது எனத் தெரிவித்தார்.

