Advertisements

இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூசிலாந்து கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில், ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், ராஜ்கோட்டில் 2 ஆவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. போட்டியில், கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய வீரர்களும், கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் தலைமையிலான நியூசிலாந்து வீரர்களும் பங்கேற்கின்றன. மேலும், இந்த போட்டியினை நியூசிலாந்து அணி கட்டாயமாக வெல்ல வேண்டிய நெருக்கடி உள்ளது.
Advertisements



