2023 North India floods: 60 பேர் உயிரிழந்த சோகம்… அபாய கட்டத்தில் யமுனை நதி!

Advertisements

2023 North India floods | Yamuna river

இமாச்சல பிரதேசத்தில்நிலச்சரிவில் சிக்கி இதுவரை 60 பேர் உயிரிழந்ததாக அம்மாநில முதல்-மந்திரி தெரிவித்துள்ளார். இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது…

சிம்லா: மேகவெடிப்பு காரணமாக இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பெய்த கனமழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 60 பேர் உயிரிழந்ததாக அம்மாநில முதல்-மந்திரி தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேசம் சிம்லாவில் அடுத்த அடுத்த ஏற்பட்ட நிலசரிவுகளில் இதுவரை 14 உடல்கள் மீட்கப்பட்டதாகவும் பலர் இடுபாடுகளில் சிக்கி இருப்பதாகவும் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மேலும் டோராடூன், பவுரி, தெக்ரி, நைனிடால், மற்றும் உதம் சிங் நகர் போன்ற பகுதிகளில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பத்ரிநாத், கேதர்நாத் ஆகிய புனித தலங்களுக்குச் செல்லும் சாலை நிலச்சரிவு காரணமாகச் சேதமடைந்துள்ளன.

இதனால் ஆன்மீக யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாகக் கங்கை. யமுனை போன்ற ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டத்தைத் தாண்டி ஓடுகின்றது. இமாச்சல பிரதேசத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *