தொடர்ந்து உயரும் தங்கம் விலை!

Advertisements

சென்னை:

தங்கத்தின் விலை இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து மிக வேகமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கடந்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி ஒரு சவரனின் விலை ரூ.60 ஆயிரத்தை கடந்தது.

அதன் பிறகு, விலை தொடர்ந்து உயர்ந்து, ஒரு சவரன் ரூ.64 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை அடைந்தது.

கடந்த 8 நாட்களாக உச்ச நிலையை அடைந்த தங்கம் விலை, நேற்று கிராமுக்கு ரூ.40 மற்றும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,980 மற்றும் ஒரு சவரன் ரூ.63,840 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7,990 மற்றும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.63,920 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக விலை மாற்றமின்றி இருந்த வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *