காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ரூ.3.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ! அமைச்சர் சந்திர பிரியங்கா வழங்கினார்!

Advertisements

புதுச்சேரி ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா நெடுங்காடு தொகுதி கோட்டுச்சேரியை அடுத்த வடமட்டம் பகுதியில் நடந்த விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் பல்வேறு அரசு நலத்திட்டங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு ஆதிதிரா விடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் சாய்.இளங்கோவன் முன்னிலை வகித்தார். காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்கு டியினர் பயனாளிகளுக்கு தொடர் நோய் சிகிச்சைக்காக 12 பயனாளிகளுக்கு ரூ.4,07,174, ஏழைப் பெண்களின் திருமண உதவித் தொகைக்காக 49 பயனாளி களுக்கு ரூ.39 லட்சம், கருவுற்ற தாய்மார்களுக்கு 64 பயனாளிகளுக்கு ரூ.9,72,000, பிரதான் மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2-வது தவணைக்கு 29 பயனாளி களுக்கு 58 லட்சம், 3-ம் தவணைக்கு 29 பயனாளி களுக்கு ரூ.29 லட்சம், பாரத ரத்னா ராஜீவ்காந்தி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2-வது தவணைக்கு 6 பயனாளிகளுக்கு ரூ.7,30,000, 3-தவணைக்கு 14 பயனாளிகளுக்கு ரூ 11,95,000, முழு கல்வி உதவி திட்டத்தின் கீழ் 354 மாணவர்களுக்கு மொத்தம் ரூ 1.10 கோடி, கலப்பு திருமணம் திட்டத்திற்கு 35 பயனாளிகளுக்கு ரூ 87,50,000, வழங்கப்பட்டது. இதில் சிறப்பம்சமாக கலப்புத் திருமணம் திட்டத்திற்கு 35 பயனாளிகளுக்கு அரசு ஒப்புதல் பெற்ற அன்றே அவர்களது வங்கி கணக்கில் சேமிப்பு தொகை செலுத்தப்பட்டு பண வைய்ப்புத் தொகைக்கான பத்திரம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிட ர் நலத்துறை துணை இயக்குனர் மதன் கலந்து கொண்டார். ஆதிதிராவிட நலத்துறை ஆய்வாளர்கள் ஆறுமுகம், காஞ்சனா, முருகேசன், செந்தில்மால், ராஜாசாக்ரடீஸ் மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *